Y.C.S
இளங்கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் அப்பட்டுவிளை பங்கில் நெடுங்காலமாகவே இயங்கிவருகிறது, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணாக்கர்கள் இவ்வியக்கத்தில் இணைந்து உருவாக்கம் பெறுகின்றனர்.
அப்பட்டுவிளை பங்கில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனத் தனித்தனியாக இரு குழுக்கள் இயங்கிவருகின்றன, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைம் மாலை 2.30 இளங்கிறிஸ்தவ மாணாக்கர்களின் கூட்டம் நடைபெறுகிறது
தன்னையும் உருவாக்கி, பிறரையும் உருவாக்கி, இறையாட்சி உருவாகிட உழைக்கும் நோக்கத்தோடு இளங்கிறிஸ்தவ மாணக்கர் இயக்கம் செயல்படுகிறது. விழிப்புணர்வு, சிந்தனை, திட்டமிடுதல், செயல்படுத்துதல், திறனாய்வு செய்தல் ஆகிய படிகளைக் கொண்டு கூட்டம் நடத்தப்படுகிறது. சுய விழிப்புணர்வும், சமூக விழிப்புணர்வும் கொண்டு, நல்லறிவோடும், ஆழ்ந்த ஆன்மீகத்தோடும் இச்சமூகம் மாறிட உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டு உழைத்திடும் மனிதர்களாக உருவாகிட இயக்கக் கூட்டங்களில் கொடுக்கப்படும் பல்வேறு பயிற்சிகளும் பயன்படுகின்றன,
No comments:
Post a Comment